புதன், 12 ஜூன், 2013

குடியாண்மை

இந்தியாவின் ஒட்டுமொத்த குடிமக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விசயம் -2014 நாடாளுமன்றத்தேர்தல்!

காங்கிரஸ் கட்சியின் ஊழல் ஆட்சி மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.எனவே ஆட்சி மாற்றத்திற்கு பா.ஜ.க வை விட்டால் வேறு கதி ஏது  என்ற நிலைப்பாடு ஏற்பட்டபோதும் இந்து சமய கட்சியாகவே தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் பா.ஜ.க வும் அதன் தலைவர் அத்வானியும் மக்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போனது வேதனையான விசயம்தான்!இருப்பினும் பா.ஜ.க வின் நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் மனதில் விழுந்தவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி!இவர் போல் நம் மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் வேண்டும் என்று ஆரம்பித்து மோடியே நம் பிரதமர் ஆனால் எப்படி இருக்கும் என்று அனைவரையும் கனவில் மிதக்க வைத்தவர் மோடி!தொடர்ந்து 4 முறை முதலமைச்சர் என்ற ஒன்றே போதும் இவர் ஆட்சியை பறைசாற்ற!ஆனால் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க மோடி பிரதமராவது சாத்தியமா என்ன?அதிலும் 85 வயதிலும் போட்டியில் முன்னிலை வகிக்கும் அத்வானிதான் விட்டுத் தருவாரா?தன் கருத்தை மீறி மோடிக்கு 'தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர்' பதவியை அளித்து விட்டார்கள் என்று தன்னுடைய பதவிகளை துறந்து கட்சியை விட்டு வெளியேறும் அத்வானியை என்னவென்று நினைப்பது?அத்வானியின் ராஜினாமா கடிதம் முதல் முறை நிகழ்வது அல்ல-"நான் சொல்வதை கேட்காவிட்டால் சாப்பிடமாட்டேன்" என்று அடம்பிடிக்கும் குழந்தையின் மிரட்டல்.தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் "நாட்டின் நலனில் அக்கறை செலுத்துவதற்கு பதில் சிலர் தன சுய விருப்பங்களுக்காக கட்சியை பயன்படுத்துகின்றனர்" என்று கூறியிருப்பதை அவரும் படித்துவிட்டுதானே  அனுப்பியிருப்பார்?மேலும் தன்னுடைய வலைதளத்தில் 'அம்பு படுக்கையில் தன மரணத்திற்கு காத்திருக்கும் பிதாமகரின் நிலை'யை தன்னுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் திரு.அத்வானி அவர்கள் அதே பீஷ்மர் தந்தையின் மகிழ்ச்சிக்காய் தன் அரசுரிமையை விட்டுத்தந்து சிற்றன்னையின் புதல்வரை அரியனையிலமர்த்தி வழி நடத்திய விதத்தையும் படித்திருப்பார்தானே?!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக