கடந்த ஏப்ரல் 30 அன்று மும்பையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.அதில் வாக்களித்த திரைப்பட பிரபலங்கள் தாம் வாக்குப் பதிவு செய்ததன் அடையாளமான மை வைத்த நடுவிரலை பத்திரிக்கைகாரர்களுக்கும்,புகைப்படக்கரர்களுக்கும் காண்பித்தனர்.அவற்றை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கவும் செய்தனர்.அதைப் பார்த்து நான் அதிர்ச்சி மட்டுமல்ல கோபமும் கொண்டேன்.மும்பையில் பெரும்பாலான நகரவாசிகள் அனைவரும்தான் வாக்குப் பதிவு செய்துள்ளனர்,இவர்கள் வாக்களித்ததில் மட்டும் அப்படியென்ன சிறப்பு...என்பதல்ல என் கோபம்!
அவரகள் வாக்களித்த விரலை மட்டும் உயர்த்தி(மற்ற விரல்களை மூடியபடி)காண்பித்த விதம்!உலகில் பெரும்பாலானோர் இதன் அர்த்தத்தை நன்கு அறிவர்.வாக்குப் பதிவு செய்ததன் அடையாளகமாக வேண்டுமானால் கொள்ளலாமே தவிர நாகரீகமான செயலாகக் கருத முடியாது.
Celebrities என இவர்களைப் பின்பற்றும் இளைஞர்கள் கேட்கலாம் இதில் என்ன தவறு?என்று.மை வைத்த விரலை மட்டும் காண்பிக்க நினைத்தோம் என்று தர்க்கமும் செய்யலாம்!வரும் நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் மாநிலங்களில் இதையே பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இளமையின் அடையாளங்களாகக் கொண்டு பின்பற்றப்படும் இத்தகைய செய்கைகளை நான் குறைகூறவில்லை,அது பிறரைப் பாதிக்காத வரை!! இந்த பிரபலங்கள் யாரை நினைத்து விரலை உயர்த்தினர் என்பது தெரியவில்லை.தாம் வாக்களித்த அரசியல்வாதியின் பிரதிவாதிக்கா....?இல்லை...நெடுநாட்களாக திட்டம் அமைத்து,உழைத்து நாடு முழுதும் தேர்தல் நடத்தும் ஆணையத்திற்கா.....?
சின்ன சின்ன விஷயங்களில் கூட தங்களைப் பின்பற்றும் ரசிகர்கள் இருக்கையில் இதுபோன்ற விஷயங்களை தவிர்க்கலாமே!
இந்தியா தொழில்துறை,பொருளாதாரம்,வானவியல் ஆராய்ச்சி என்று முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கையில் நமது தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவு செய்பவர்களின் அங்க அடையாளங்களைப் பதிவு செய்யும் biometric சாதனங்களை பயன்படுத்தலாமே!
அவரகள் வாக்களித்த விரலை மட்டும் உயர்த்தி(மற்ற விரல்களை மூடியபடி)காண்பித்த விதம்!உலகில் பெரும்பாலானோர் இதன் அர்த்தத்தை நன்கு அறிவர்.வாக்குப் பதிவு செய்ததன் அடையாளகமாக வேண்டுமானால் கொள்ளலாமே தவிர நாகரீகமான செயலாகக் கருத முடியாது.
Celebrities என இவர்களைப் பின்பற்றும் இளைஞர்கள் கேட்கலாம் இதில் என்ன தவறு?என்று.மை வைத்த விரலை மட்டும் காண்பிக்க நினைத்தோம் என்று தர்க்கமும் செய்யலாம்!வரும் நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் மாநிலங்களில் இதையே பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இளமையின் அடையாளங்களாகக் கொண்டு பின்பற்றப்படும் இத்தகைய செய்கைகளை நான் குறைகூறவில்லை,அது பிறரைப் பாதிக்காத வரை!! இந்த பிரபலங்கள் யாரை நினைத்து விரலை உயர்த்தினர் என்பது தெரியவில்லை.தாம் வாக்களித்த அரசியல்வாதியின் பிரதிவாதிக்கா....?இல்லை...நெடுநாட்களாக திட்டம் அமைத்து,உழைத்து நாடு முழுதும் தேர்தல் நடத்தும் ஆணையத்திற்கா.....?
சின்ன சின்ன விஷயங்களில் கூட தங்களைப் பின்பற்றும் ரசிகர்கள் இருக்கையில் இதுபோன்ற விஷயங்களை தவிர்க்கலாமே!
இந்தியா தொழில்துறை,பொருளாதாரம்,வானவியல் ஆராய்ச்சி என்று முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கையில் நமது தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவு செய்பவர்களின் அங்க அடையாளங்களைப் பதிவு செய்யும் biometric சாதனங்களை பயன்படுத்தலாமே!