பணத்தைத் தேடும் பெரும்பாலான மனிதர்களின் தேடல் இது!பணத்தின் வலிமையால்,பணத்தின் அதிகாரத்தால் வீடு வாங்கலாம்;மனிதர்களை வாங்கலாம்;அதிகாரிகளை வாங்கலாம்;அமைச்சர்களை வாங்கலாம் என்று நினைக்கும் மனிதர்கள் அதன் மூலம் அடுத்தவர்களின் மேல் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.
மனிதனை மனிதன் அடிமைப்படுத்த நினைக்கும் போது அதிகாரத்தை கையிலெடுக்க நினைக்கிறான்.மாறாக மனிதனை மனிதன் மதிக்கும் இடத்தில் இருவரிடமும் பரஸ்பர அன்பு மட்டுமே காணப்படும்.
சரி...அலுவலகத்தில் பதவி உயர்வுக்காகப் போராடும் சாதாரண மனிதர்களாகிய நாம் பதவி மூலம் கிடைக்கும் அதிகப் படியான பணத்தை விரும்புகிறோமா? அல்லது பதவியின் அதிகாரத்தை விரும்புகிறோமா?
இரண்டும்தான்!
மேலே தலைமை என்று ஒன்று இருக்கிறதா ? யாருமே அறிந்ததில்லை.ஆனால் இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் அந்தத் தலைமை விநியோகிக்கப்பட்டு ஒவ்வொன்றும் அதனதன் வேலையை சரியாக செய்கிறது.
தலைமைக்கும் அதிகாரத்திற்கும் அப்படி என்னதான் வேறுபாடு?
தலைமை அதன் அடக்கத்தை மறக்கும்போது அது அதிகாரமாகிறது.ஆம்! தலைவன் என்பவன் உணர்வு கடந்த அடக்கம் கொண்டவனாக, எளிமையானவனாக இருக்க வேண்டும்.உணர்வு கடந்த அடக்கம் என்பது கோபம்,பொறாமை,அதிருப்தி,சுயநலம்,வெறுப்பு,வீம்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை கடந்த அமைதி என்ற இனிமை!எந்த ஒரு மனிதன் தன்னை எதிரியாக நினைப்பவர்களை பழிவாங்கும் எண்ணமில்லாது சந்திக்கிறானோ அவனே சரியான தலைமைப் பண்புள்ளவன்.மாறாக "நீ என்னை இப்படி பேசிவிட்டாயா? நான் என்ன செய்கிறேன் பார் " என்று நினைக்கும்போது ஏதாவது செய்து தன் எதிரியை தன் காலில் விழ வைக்கிறான்.
தன் வீரத்தை அடுத்தவர்களிடம் பிரகடனப் படுத்த முயலும்போது ஆதிக்கம் அல்லது அதிகாரமே பிறக்கிறது.வீரத்தின் உள்நோக்கம் ஆணவம்;அதன் வெளிப்பாடு வன்முறை.ஆனால் வீரத்தைக் கடந்த வீரம் எது தெரியுமா? கருணை!!
இதைதான் வள்ளலார்,
"அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி " என்றார்.
பாரதியாரும் ,
"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே..." என்று பாடினார்.
தன்னுடைய வீரத்தை பறைசாற்ற அடுத்தவனுடைய திறமையைத் தாழ்த்துவதும்,அவனுடைய வலிமையை தாழ்த்துவதும் கூட அதிகாரத்தின் வெளிப்பாடே!அதனால்தான் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிச் செயலைக் கண்ட காந்தியடிகள்,
"எப்படிப் பிறரைத் தாழ்த்துவதன் மூலம் மற்றவன் உயர முடியும் என்று எனக்கு புரியவில்லை " என்றார்.
ஆம்!
வலிமைக்கு பதில் மென்மைதான்!
கோபத்துக்கு பதில் அன்புதான்!
பகைமைக்கு பதில் உறவுதான்!
அதிகாரத்துக்கு பதில் எளிமைதான்!
உயர்ந்த பண்புள்ளவர்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதில்லை;அது அவர்களிடம் இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்;அவர்கள் தங்களைப் பற்றி பிறர் புகழ்பாட வேண்டுமென விரும்புவதில்லை; போகுமிடங்களிலெல்லாம் தன்னைப் பற்றிய சுவரொட்டிகளை எதிர்பார்ப்பதில்லைமக்கள் தன்னை பெரிய மனிதனாக நினைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை ; மக்களை தன்னையே நம்பியிருக்க வைப்பதில்லை.அதிகாரமற்ற தலைவனுக்கு உதாரணமாக அமெரிக்காவின் ரூஸ்வெல்ட்டைக் கூறலாம்.
1930- களில் அமெரிக்காவில் பஞ்சம் வந்தது.அப்போது அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் அரசாங்கப் பணத்தை எடுத்து மக்களை நிறைய சாலைகள் அமைக்கச் செய்தார்.அதில் கிடைத்த பணத்தில் மக்களின் பசியும்,பஞ்சமும் தீர்ந்தது.
ரூஸ்வெல்ட் ஒரு சர்வாதிகாரியாகதானே செயல்பட்டார் என்று தோன்றலாம்.உண்மைதான்!ஆனால் தன் நாட்டு மக்களுக்கு அல்ல.
ரூஸ்வெல்ட் நினைத்திருந்தால் மக்களுக்கு இனாமாக பணத்தைக் கொடுத்திருக்கலாம்.மாறாக அவர் மக்களுடைய சுயகௌரவத்தைக் கெடுக்காத விதம் அவர்களை உழைக்கச் செய்தார்.
இங்கு ரூஸ்வெல்ட் ஒரு கல்லில் இரு மாங்காய்கள் அல்லவா அடித்திருக்கிறார்.அதிகாரத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?மக்கள் தன்னையே நம்பியிருந்தால்தான் தான் சொல்வதைக் கேட்பார்கள் என்று அவர் நினைக்கவில்லை.மக்களை "நாங்கள்தான் செய்தோம்" என்று சொல்ல வைத்தார்.இதுதான் தலைமையின் சரியான அணுகுமுறை.
நம் ஊரில் என்ன நடக்கிறது?நம் தலைவர்கள் தேர்தலில் வெற்றியடைய தங்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு பணம்;வெற்றியடைந்த பின் "நாங்கள்தான் மக்களுக்கு செய்தோம்" என்றப் பிரகடனம்.இப்படி கொடுத்து கொடுத்து மக்களை அதிகமாக எதிர்பார்க்க வைத்து விட்டனர்.மக்களும் தங்களின் 'வரிப் பணத்தால்தான் அரசாங்கம்' என்ற உண்மையை மறந்து 'அரசாங்கத்தின் பணம் நமக்கே ' என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.எனவேதான் மழை பெய்தால் நிவாரணம் ;காற்றடித்தால் நிவாரணம் ;தீபாவளி,பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டனர்.
தலைவன் என்பவன் வழிகாட்ட வேண்டும்;ஆள்பவனாக அல்ல.அதேபோல் தலைவன் தன்னை முன்னிறுத்திப் பிரகடனப் படுத்துபவனாக இருக்கக் கூடாது. 'கடமையை செய்;பலனை எதிர்பாராதே' என்கிறது பகவத்கீதை.அதாவது உன்னுடைய கடமைக்குதான் நீ அதிகாரி. அதன் பலனுக்கு அல்ல.கடமையை மட்டும் செய்,அத்துடன் நிறுத்திக் கொள்;அதன் பலனுக்கு உரிமைக் கொண்டாடாதே.ஒரு காரியம் சரியாக நடந்து முடிவதில் எத்தனையோ விஷயங்கள் , சிறுசிறு செயல்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்று சேர்ந்து , இணைந்து, அவையவை தன் காரியத்தை செய்யும் போதுதான் அந்த காரியம் நிறைவேறுகிறது.ஓரளவுதான் உன் வேலை; அதனால் முழுப்பலன் மேல் உரிமைக் கொண்டாடுவது தர்மம் அல்ல.
ஆனால் மனிதராய் பிறந்த அனைத்து உயிர்களுக்குமே தான் ஒரு காரியம் செய்துவிட்டால் அதைப் பற்றி பிறர் ஓரிரு வார்த்தைகளாவது புகழ்ந்து கூறுவதைக் கேட்டால்தான் மன அமைதி கிடைக்கிறது.
புகழைத் தேடும் மனிதர்களின் மனோபாவம் பற்றி அடுத்தக் கட்டுரையில்!
மனிதனை மனிதன் அடிமைப்படுத்த நினைக்கும் போது அதிகாரத்தை கையிலெடுக்க நினைக்கிறான்.மாறாக மனிதனை மனிதன் மதிக்கும் இடத்தில் இருவரிடமும் பரஸ்பர அன்பு மட்டுமே காணப்படும்.
சரி...அலுவலகத்தில் பதவி உயர்வுக்காகப் போராடும் சாதாரண மனிதர்களாகிய நாம் பதவி மூலம் கிடைக்கும் அதிகப் படியான பணத்தை விரும்புகிறோமா? அல்லது பதவியின் அதிகாரத்தை விரும்புகிறோமா?
இரண்டும்தான்!
இந்த இடத்தில்தான் நமக்கு ஒருவித புரிதல் வேண்டும்.அதாவது பதவி உயர்வு மூலம் கிடைப்பது தலைமையேத் தவிர அதிகாரம் அல்ல.நம்மில் பலரும் தலைமைப் பண்பிற்கும் அதிகாரத்திற்கும் உள்ள இடைவெளியில் சிக்கித் தவிக்கிறோம்.
மேலே தலைமை என்று ஒன்று இருக்கிறதா ? யாருமே அறிந்ததில்லை.ஆனால் இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் அந்தத் தலைமை விநியோகிக்கப்பட்டு ஒவ்வொன்றும் அதனதன் வேலையை சரியாக செய்கிறது.
தலைமைக்கும் அதிகாரத்திற்கும் அப்படி என்னதான் வேறுபாடு?
தலைமை அதன் அடக்கத்தை மறக்கும்போது அது அதிகாரமாகிறது.ஆம்! தலைவன் என்பவன் உணர்வு கடந்த அடக்கம் கொண்டவனாக, எளிமையானவனாக இருக்க வேண்டும்.உணர்வு கடந்த அடக்கம் என்பது கோபம்,பொறாமை,அதிருப்தி,சுயநலம்,வெறுப்பு,வீம்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை கடந்த அமைதி என்ற இனிமை!எந்த ஒரு மனிதன் தன்னை எதிரியாக நினைப்பவர்களை பழிவாங்கும் எண்ணமில்லாது சந்திக்கிறானோ அவனே சரியான தலைமைப் பண்புள்ளவன்.மாறாக "நீ என்னை இப்படி பேசிவிட்டாயா? நான் என்ன செய்கிறேன் பார் " என்று நினைக்கும்போது ஏதாவது செய்து தன் எதிரியை தன் காலில் விழ வைக்கிறான்.
தன் வீரத்தை அடுத்தவர்களிடம் பிரகடனப் படுத்த முயலும்போது ஆதிக்கம் அல்லது அதிகாரமே பிறக்கிறது.வீரத்தின் உள்நோக்கம் ஆணவம்;அதன் வெளிப்பாடு வன்முறை.ஆனால் வீரத்தைக் கடந்த வீரம் எது தெரியுமா? கருணை!!
இதைதான் வள்ளலார்,
"அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி " என்றார்.
பாரதியாரும் ,
"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே..." என்று பாடினார்.
தன்னுடைய வீரத்தை பறைசாற்ற அடுத்தவனுடைய திறமையைத் தாழ்த்துவதும்,அவனுடைய வலிமையை தாழ்த்துவதும் கூட அதிகாரத்தின் வெளிப்பாடே!அதனால்தான் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிச் செயலைக் கண்ட காந்தியடிகள்,
"எப்படிப் பிறரைத் தாழ்த்துவதன் மூலம் மற்றவன் உயர முடியும் என்று எனக்கு புரியவில்லை " என்றார்.
ஆம்!
வலிமைக்கு பதில் மென்மைதான்!
கோபத்துக்கு பதில் அன்புதான்!
பகைமைக்கு பதில் உறவுதான்!
அதிகாரத்துக்கு பதில் எளிமைதான்!
உயர்ந்த பண்புள்ளவர்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதில்லை;அது அவர்களிடம் இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்;அவர்கள் தங்களைப் பற்றி பிறர் புகழ்பாட வேண்டுமென விரும்புவதில்லை; போகுமிடங்களிலெல்லாம் தன்னைப் பற்றிய சுவரொட்டிகளை எதிர்பார்ப்பதில்லைமக்கள் தன்னை பெரிய மனிதனாக நினைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை ; மக்களை தன்னையே நம்பியிருக்க வைப்பதில்லை.அதிகாரமற்ற தலைவனுக்கு உதாரணமாக அமெரிக்காவின் ரூஸ்வெல்ட்டைக் கூறலாம்.
1930- களில் அமெரிக்காவில் பஞ்சம் வந்தது.அப்போது அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் அரசாங்கப் பணத்தை எடுத்து மக்களை நிறைய சாலைகள் அமைக்கச் செய்தார்.அதில் கிடைத்த பணத்தில் மக்களின் பசியும்,பஞ்சமும் தீர்ந்தது.
ரூஸ்வெல்ட் ஒரு சர்வாதிகாரியாகதானே செயல்பட்டார் என்று தோன்றலாம்.உண்மைதான்!ஆனால் தன் நாட்டு மக்களுக்கு அல்ல.
ரூஸ்வெல்ட் நினைத்திருந்தால் மக்களுக்கு இனாமாக பணத்தைக் கொடுத்திருக்கலாம்.மாறாக அவர் மக்களுடைய சுயகௌரவத்தைக் கெடுக்காத விதம் அவர்களை உழைக்கச் செய்தார்.
இங்கு ரூஸ்வெல்ட் ஒரு கல்லில் இரு மாங்காய்கள் அல்லவா அடித்திருக்கிறார்.அதிகாரத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?மக்கள் தன்னையே நம்பியிருந்தால்தான் தான் சொல்வதைக் கேட்பார்கள் என்று அவர் நினைக்கவில்லை.மக்களை "நாங்கள்தான் செய்தோம்" என்று சொல்ல வைத்தார்.இதுதான் தலைமையின் சரியான அணுகுமுறை.
நம் ஊரில் என்ன நடக்கிறது?நம் தலைவர்கள் தேர்தலில் வெற்றியடைய தங்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு பணம்;வெற்றியடைந்த பின் "நாங்கள்தான் மக்களுக்கு செய்தோம்" என்றப் பிரகடனம்.இப்படி கொடுத்து கொடுத்து மக்களை அதிகமாக எதிர்பார்க்க வைத்து விட்டனர்.மக்களும் தங்களின் 'வரிப் பணத்தால்தான் அரசாங்கம்' என்ற உண்மையை மறந்து 'அரசாங்கத்தின் பணம் நமக்கே ' என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.எனவேதான் மழை பெய்தால் நிவாரணம் ;காற்றடித்தால் நிவாரணம் ;தீபாவளி,பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டனர்.
தலைவன் என்பவன் வழிகாட்ட வேண்டும்;ஆள்பவனாக அல்ல.அதேபோல் தலைவன் தன்னை முன்னிறுத்திப் பிரகடனப் படுத்துபவனாக இருக்கக் கூடாது. 'கடமையை செய்;பலனை எதிர்பாராதே' என்கிறது பகவத்கீதை.அதாவது உன்னுடைய கடமைக்குதான் நீ அதிகாரி. அதன் பலனுக்கு அல்ல.கடமையை மட்டும் செய்,அத்துடன் நிறுத்திக் கொள்;அதன் பலனுக்கு உரிமைக் கொண்டாடாதே.ஒரு காரியம் சரியாக நடந்து முடிவதில் எத்தனையோ விஷயங்கள் , சிறுசிறு செயல்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்று சேர்ந்து , இணைந்து, அவையவை தன் காரியத்தை செய்யும் போதுதான் அந்த காரியம் நிறைவேறுகிறது.ஓரளவுதான் உன் வேலை; அதனால் முழுப்பலன் மேல் உரிமைக் கொண்டாடுவது தர்மம் அல்ல.
ஆனால் மனிதராய் பிறந்த அனைத்து உயிர்களுக்குமே தான் ஒரு காரியம் செய்துவிட்டால் அதைப் பற்றி பிறர் ஓரிரு வார்த்தைகளாவது புகழ்ந்து கூறுவதைக் கேட்டால்தான் மன அமைதி கிடைக்கிறது.
புகழைத் தேடும் மனிதர்களின் மனோபாவம் பற்றி அடுத்தக் கட்டுரையில்!