செவ்வாய், 14 ஜூன், 2011

முடிந்த பாதையில் முடியாத தேடல்....!

என் வலைப்பூவில் வெளியிடப்படும் பதிவுகளை தவறாமல் படித்து வரும் நெஞ்சங்களுக்கு நன்றி!ஒரு புதியப் பதிவுடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.இப்பதிவுக்கான ஒரு சுவையான சம்பவம் உள்ளது.நான் இஸ்கான் கோயிலுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள அரண்மனைத் தோட்டத்தில் சிறிது மட்டுமே செல்லக்கூடிய ஒரு பாதை இருந்தது.இருபுறமும் செடிகள் சூழ்ந்து நடுவில் மிகத் தெளிவாக அமைக்கப்பட்டிருந்த அப்பாதையைக் கண்டதும் புகைப்படம் எடுக்கும் ஆவல் தொற்றிக் கொண்டது.இதுதான் அப்புகைப்படம்








இப்படத்தைப் பார்த்ததும் உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகிறது?
இப்புகைப்படத்தில் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம், சிறு தொலைவுக்குள் முடிந்துவிடும் பாதைக்கு அப்பால் காண்பதற்கு ஒரு மலை மட்டுமே தெரிந்தும் எங்கு இந்த மனிதன் நடந்து போகிறான் என்பதுதான்!அதற்கு ஒருவரியில் உதித்த கவிதை இதோ!

முடிந்த பாதையில்
முடியாத தேடல்....!

இது மனதிற்கு கொஞ்சம் தத்துவார்த்தமாகப் படவே 'தேடலைப்' பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.நாம் அனைவருமே பிறப்பு முதல் இறப்பு வரை எதையோ தேடிக் கொண்டேதானிருக்கிறோம்.அப்படிப் பட்ட தேடல்களில் சிலவற்றைப் பற்றி எழுதுகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக