வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கண்ணோட்டம்

"தனிமனிதனுக்கு உணவில்லையெனில்..."
பாரதியின் கருணைக் கவிதையை
கொலைவெறியில் பேசும்
கறை வேட்டிக்காரர்களே!

வீதியில் அரங்கேறும்
பிறிதொரு உயிர்படும்
வேதனையைக் கண்டும்
காணாமல் போகும் குருடர்களே!

நான் அஹிம்சாவாதி
எனக்கூறிக் கொண்டு பிறர்
மனத்தைக் கொத்திக் காயப்படுத்தும் பருந்துகளே!

வஞ்சத்தைத் தீர்க்கவோ
தன்வயிறு நிறைக்கவோ
பிறர் உயிர் தின்னும் மாமிசப் பட்சிகளே!

என்றேனும் கருணையுடன் நினைத்திருப்பீரா...?

உயிர்ப்பிச்சைக் கேட்டும்
கிடைக்காது போன வெற்றிவேலனை...
மதத்தீயில் கருகிய உயிர்களை...
அநாதையாக்கப்பட்ட பிஞ்சுகளை...
சமாதியாய், அகதியாய் மாறிப்போன உறவுகளை...
சுனாமி சுருட்டிய சொந்தங்களை...
தீவிரவாதத்தில் செத்து மடியும் பந்துக்களை...
நிலநடுக்கத்தால் சுயநினைவற்ற பிறந்த குழந்தையை...

இல்லையெனில்...

வீதியில் உறங்கும் குளிரில் விறைத்த
உடலுக்கு- ஒரு போர்வையாவது
அளித்துப் பார்!
உன் கண்ணோட்டம் மாறும்.
வள்ளுவனின் 'கண்ணோட்டமும்' சிறக்கும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக